ஒரு திரைப்படம் 11 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையில் உள்ள ஒரு பங்களாவில் படப்பிடிப்பு நடத்தி ‘தப்பா யோசிக்காதீங்க’ என்கிற ஒரு முழுப்படத்தை 11 மணி நேரத்தில் எடுத்து முடித்து இருக்கிறார்கள்.
நிரஞ்சனா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.அனில்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுல்தான்ஸ் இயக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவு – எஸ்.ஆர். வெற்றி, இசை – ஸ்டீபன் சதீஷ், கலை சுரா.
‘தென்றல்’ தொடரில் நடிக்கும் ராஜா கதாநாயகனாக நடிக்கிறார்.
ஜோதிஷா, சனிலா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மற்றும் சிசர் மனோகர், பேபி மோனிகா உட்பட 40 நடிகர்களும் நடித்துள்ளனர்.
இயக்குநர் சுல்தான்ஸ்… திரைப்படக் கல்லூரி மாணவர்.
ஏவிஎம் தயாரித்த 13 தொலைக்காட்சித் தொடர்களில் பணி புரிந்திருக்கிறார்.
‘தப்பா யோசிக்காதீங்க’ படக்கதை பற்றி இயக்குநர் சுல்தான்ஸிடம் கேட்டபோது,
”ஒருமனிதன் தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தால் அவனுக்கு ஏற்படும் கஷ்டங்கள் என்ன? பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தப்படும்போது சந்திக்கும் இன்னல்களை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் சமாளிக்க எதைக் கையாள்கிறான் என்பதை படம் விளக்கும். இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி உறவு உயர்வானது. அது சிறப்பாக நின்று நிலைக்க விட்டுக் கொடுத்தல் எவ்வளவு அவசியம் என்பதையும் கூறியிருக்கிறோம்.” என்றார்.
படப்பிடிப்பு அனுபவம் பற்றி சுல்தான்ஸ் கூறும்போது “இந்த ஒரு நாள் படப்பிடிப்புக்காக சரியாக யோசித்து முன்தயாரிப்புக்கு சரியாகத் திட்டமிட்டோம். ஒத்திகைகள் பல முறை பார்க்கப்பட்டன. இதில் நடித்த நடிகர் நடிகைகள் வெவ்வேறு படங்களில் தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர்கள். ஒரு நாள் ஒருவர் வந்தால் மறுநாள் இன்னொருவர் வரமாட்டார். அவரவருக்கு வேலைகள் அப்படி. ஆனாலும் படப்பிடிப்பு நாளில் இன்று எல்லாரும் சரியாக வந்து நடித்து ஒத்துழைத்ததால் வெற்றிகரமாக முடித்து விட்டோம். பொதுவாக இப்படி விரைவாக எடுக்கும் படங்களில் டாக்கி போர்ஷன்தான் எடுக்கப்படும். இதில் 2 பாடல் காட்சிகளையும் எடுத்திருக்கிறோம். “என்றார்.
தயாரிப்பாளர் அனில் குமார் கூறுகையில் ” இயக்குநரின் திறமையையும் திட்டமிடலையும் நம்பினேன். செய்து காட்டி விட்டார்.” என்றார்.
படப்பிடிப்பு முடிந்ததும். படக்குழுவினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
கதாநாயகன் ராஜா கூறும் போது ” சினிமா ஒரு கூட்டு முயற்சி என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.” என்றார்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னையில் உள்ள ஒரு பங்களாவில் படப்பிடிப்பு நடத்தி ‘தப்பா யோசிக்காதீங்க’ என்கிற ஒரு முழுப்படத்தை 11 மணி நேரத்தில் எடுத்து முடித்து இருக்கிறார்கள்.
நிரஞ்சனா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.அனில்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுல்தான்ஸ் இயக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவு – எஸ்.ஆர். வெற்றி, இசை – ஸ்டீபன் சதீஷ், கலை சுரா.
‘தென்றல்’ தொடரில் நடிக்கும் ராஜா கதாநாயகனாக நடிக்கிறார்.
ஜோதிஷா, சனிலா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மற்றும் சிசர் மனோகர், பேபி மோனிகா உட்பட 40 நடிகர்களும் நடித்துள்ளனர்.
இயக்குநர் சுல்தான்ஸ்… திரைப்படக் கல்லூரி மாணவர்.
ஏவிஎம் தயாரித்த 13 தொலைக்காட்சித் தொடர்களில் பணி புரிந்திருக்கிறார்.
‘தப்பா யோசிக்காதீங்க’ படக்கதை பற்றி இயக்குநர் சுல்தான்ஸிடம் கேட்டபோது,
”ஒருமனிதன் தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தால் அவனுக்கு ஏற்படும் கஷ்டங்கள் என்ன? பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தப்படும்போது சந்திக்கும் இன்னல்களை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் சமாளிக்க எதைக் கையாள்கிறான் என்பதை படம் விளக்கும். இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி உறவு உயர்வானது. அது சிறப்பாக நின்று நிலைக்க விட்டுக் கொடுத்தல் எவ்வளவு அவசியம் என்பதையும் கூறியிருக்கிறோம்.” என்றார்.
படப்பிடிப்பு அனுபவம் பற்றி சுல்தான்ஸ் கூறும்போது “இந்த ஒரு நாள் படப்பிடிப்புக்காக சரியாக யோசித்து முன்தயாரிப்புக்கு சரியாகத் திட்டமிட்டோம். ஒத்திகைகள் பல முறை பார்க்கப்பட்டன. இதில் நடித்த நடிகர் நடிகைகள் வெவ்வேறு படங்களில் தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர்கள். ஒரு நாள் ஒருவர் வந்தால் மறுநாள் இன்னொருவர் வரமாட்டார். அவரவருக்கு வேலைகள் அப்படி. ஆனாலும் படப்பிடிப்பு நாளில் இன்று எல்லாரும் சரியாக வந்து நடித்து ஒத்துழைத்ததால் வெற்றிகரமாக முடித்து விட்டோம். பொதுவாக இப்படி விரைவாக எடுக்கும் படங்களில் டாக்கி போர்ஷன்தான் எடுக்கப்படும். இதில் 2 பாடல் காட்சிகளையும் எடுத்திருக்கிறோம். “என்றார்.
தயாரிப்பாளர் அனில் குமார் கூறுகையில் ” இயக்குநரின் திறமையையும் திட்டமிடலையும் நம்பினேன். செய்து காட்டி விட்டார்.” என்றார்.
படப்பிடிப்பு முடிந்ததும். படக்குழுவினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
கதாநாயகன் ராஜா கூறும் போது ” சினிமா ஒரு கூட்டு முயற்சி என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.” என்றார்.

No comments:
Post a Comment